Also Watch
Read this
By: Manigandan Raja

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட ரொட்டிக்கடை பகுதியில் வசித்து வரும் செல்வக்குமார் என்பவரின் வீட்டில் அருகாமையில் மேய்ந்து கொண்டிருந்த கோழியை பிடிப்பதற்காக இன்று மாலை சுமார் 3 மணி அளவில் சிறுத்தை ஒன்று அங்குள்ள கோழிகளை துரத்தியது.
அப்போது அங்குள்ள நாய் குறைக்கும் சத்தம் கேட்டு பார்த்தபோது கோழிகளை பிடிப்பதற்காக சிறுத்தை ஒன்று குடியிருப்புக்குள் நுழைந்ததை கண்டனர் இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு
வாசிகள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் இப்பகுதியில் கடந்த ஆண்டு இதேபோல் செல்வக்குமாரின் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டில் வந்து விளையாடிக் கொண்டிருந்தபோது இது போன்ற சிறுத்தை வந்து குழந்தைகளை பிடிப்பதற்காக வந்தபோது நாய் அவர்கள் இருவரையும் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைக்கின்றனர்.