Also Watch
Read this
By: Manigandan Raja

தேங்காய் சில்லு :
சேலம் மாவட்டம் ஆத்தூர் காமராஜ் நகர் சாலையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் வெள்ளிக்கிழமை என்பதால் திருஷ்டி தேங்காய் ஊழியர் வினோத் குமார் சாலையில்
உடைத்து உள்ளனர்.
அப்போது தேங்காய் ஓடு சாலையின் மறுபுறம் நின்று கொண்டிருந்த லோடு ஆட்டோ டயர் மீது பட்டதாக கூறப்படுகிறது. இதில் மது போதையில் இருந்த ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்த கண்ணதாசன் மகன் சூர்யா மற்றும் தனியார் கிளினிக் வேலை செய்யவும் ஊழியர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் கற்களை கொண்டு தாக்கியுள்ளதாகவும் பிறகு ஆட்டோவில் வைத்திருந்த சூரி கத்தி எடுத்து வெட்ட வந்ததாகவும்அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் சூர்யாவின் பின்பக்கம் மண்டையில் காயம் ஏற்பட்டது அப்போது சாலையில் சென்ற பொதுமக்கள் பிடித்து ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் மணிமகன் சூர்யா கொடுத்த புகாரின் அடிப்படையில்
கண்ணதாசன் மகன் சூர்யா மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் பகுதியில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை கொண்டு வருகின்றனர்
இந்த தாக்குதலில் காயம் அடைந்த மதுபோதை ஆசாமி சூர்யா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved