Also Watch
Read this
By: Manigandan Raja

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் :
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது, இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விழுப்புரம் கள்ளக்குறிச்சி
மாவட்டத்திலிருந்து நாள் ஒன்றுக்கு ஐந்து இருக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நிலங்களில் விரைந்த பல்வேறு தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்,
கடந்த செவ்வாய்க்கிழமை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல், சோளம், கம்பு உள்ளிட்ட தானியங்களை எடுத்து வந்து கடந்த நான்கு காத்திருந்தும் இன்றும் விலை போடாமல் திருப்பி எடுத்துச் செல்லுமாறு கூறுவதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திருக்கோவிலூர் விழுப்புரம் செல்லும் பிரதான சாலையில் தரையில் அமர்ந்து சாலை மறியலில் விடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது,
கடந்த இரண்டு மாதமாக அதிகாரிகள் விவசாயிகளை மதிக்காமல் அவர்கள் கொண்டுவரும் பொருட்களை வேண்டுமென்றே காலதாமதம் செய்து விற்பனைக்கு வாங்குவதாகவும் குறைந்து விலைக்கு கொள்முதல் செய்வதாகவும் கூறி தினமும் சாலை மறியலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved