Also Watch
Read this
By: Manigandan Raja

கடனாக பெட்ரோல் கேட்டு வாக்குவாதம் :
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்கில் கடனாக பெட்ரோல் கேட்டு தராததால், ஊழியரை மர்மநபர்கள் சரமாரியாக தாக்கும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நிலா பிரியன் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
அவர் இரவு பணியில் இருந்த போது திருவதிகை பகுதியைச் சேர்ந்த ஒருவர் பணம் தராமல் பெட்ரோல் கேட்ட நிலையில், தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் ஆட்களை அழைத்து வந்து சரமாரியாக தாக்கியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved