Also Watch
Read this
By: Web Team

வேலூர் டிடர்லைன் பகுதியில் உள்ள அருள்மிகு தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அம்மன் மடியில் வைத்து பூஜிக்கப்பட்ட 50 ரூபாய் நோட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.