Also Watch
Read this
By: Fyrose Banu

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா களைகட்டியது. பெண் பக்தர் 22 அடி வேல் குத்தி பக்தி பரவசத்துடன் ஆடிய காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
களைக்கட்டும் மாசித்திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசிதிருவிழா வெகு விமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு மாசி திருவிழா 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

அப்பன் முருகனே வந்தது போல்...
தற்போது மாசி திருவிழா களைகட்டி வரும் நிலையில், கோவில்பட்டி, சிவகாசி, சாத்தூர், விருதுநகர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். அதில் சிறுவர், சிறுமிகள் முருகர் வேடம் அணிந்து வந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காவடி சுமந்து வந்தனர். காவடி சுமந்து வந்த பக்தர்கள், 22 அடி வேல் குத்தி வந்த ஆண் மற்றும் பெண் பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஆடிய காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 2-ம் தேதி நடக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved