Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியில், “குட்டீஸ் கொலு” காண்போரை கவர்ந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், நவராத்திரி விழா கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று நவராத்திரி சிகர நிகழ்ச்சி மற்றும் ஆயுத பூஜை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்நிலையில், வெள்ளிச்சந்தை பகுதியில் செயல்பட்டு வரும் தாராதி நடன பள்ளியில், "குட்டீஸ் கொலு” நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு, நடனம் பயிலும் 2 வயது முதல் 16 வயது வரையிலான 40க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள், சரஸ்வதி, லட்சுமி, சிவன், விஷ்ணு, பிரம்மா, அம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடம் தரித்து, கொலு பொம்மையாக அமர்ந்திருந்தனர்.

கடவுள் வேடமணிந்த பெண் குழந்தைகள், அச்சு அசல் கொலு பொம்மை போல காட்சியளித்த நிலையில் “குட்டீஸ் கொலு” நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.