news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தொடர் மழையால் நிரம்பிய தடுப்பணைகள், விவசாயிகள் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

தொடர் மழையால் நிரம்பிய தடுப்பணைகள், விவசாயிகள் மகிழ்ச்சி

ஊத்துக்கோட்டை, திருவள்ளூர்

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
dam

ஆந்திரா மற்றும் தமிழக எல்லையில், தொடர் மழையின் காரணமாக தடுப்பணைகள் நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி, ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில், ஆரணி ஆற்றங்கரையோரத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.

இந்நிலையில், தற்போது ஆரணி ஆற்றின் குறுக்கே ஊத்துக்கோட்டை அருகே சிட்ரம்பாக்கம் தடுப்பணை மற்றும் பெரியபாளையம் அடுத்த பாளேஸ்வரம் தடுப்பணை நிரம்பி வழிகின்றன.
இந்த தடுப்பணைகள் நிரம்பியதால், நிலத்தடி நீர் வெகுவாக உயரும் என்றும், முப்போகம் விவசாயம் மேற்கொள்ள தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் கூறி
மகிழ்ச்சி அடைந்தனர்.

நிரம்பி வழியும் தடுப்பணைகளில் பொதுப்பணித்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆபத்தை உணராமல், பொது மக்கள் வாகனங்களை கழுவியும் துணிகளை துவைத்தும் குளித்தும் வருகின்றனர் என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
5 hrs 29 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved