மருதங்கோடு பருத்தி விளை ஈஸ்வர கால பூதத்தான் சிவ சுடலைமாடன் கோயில் மாசி திருவிழா மற்றும் பிரதிஷ்டை ஆண்டு கொடை விழாவில் பொங்கல் வைத்து நடத்திய வழிபாட்டில் திரளான பெண்கள் பங்கேற்றனர். மாசி திருவிழா, பிரதிஷ்டை கொடை விழாமருதங்கோடு அருகே சூழிக்கோணம் பருத்தி விளை ஈஸ்வர கால பூதத்தான் சிவசுடலை மாடன் கோயில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான கோயில் ஆகும். இக்கோயில் மூன்று நாட்கள் நடக்கும் மாசி திருவிழா மற்றும் பிரதிஷ்டை கொடை விழா 22ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.சமூக பொங்கல் வழிபாடுவிழாவில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நாகரூட்டு, சமூண்டி ஹோமம் உட்பட பல பூஜைகள் நடைபெற்று வந்தது விழாவின் முக்கிய நிகழ்வான சமூக பொங்கல் வழிபாடு நடைபெற்றது இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து நேர்ச்சை கடனை செலுத்தினர். தொடர்ந்து மஞ்சள் நீராடல் பூப்படை வாருதல் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். Related Link மக்காச்சோள கதிர்களை அனுப்பி நூதன போராட்டம்