Also Watch
Read this
By: Manigandan Raja

கற்களால் தாக்கிய தம்பிகள் :
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட இளம்பிள்ளை சுண்டெலி பெருமாள் கோவில் அருகே வசிக்கும் அய்யாவு, கஸ்தூரி தம்பதியினருக்கு மூன்று மகன்கள் மோகன்ராஜ், ஜெயக்குமார், அருண் பிரசாத், இந்த நிலையில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படவே.
இவர்களுக்கு உண்டான நிலப் பாகப்பிரிவினை கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மோகன்ராஜுக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகளை நேற்று மேற்கொண்ட போது.
மோகன்ராஜின் சகோதரர்களான ஜெயக்குமார் மற்றும் அருண் பிரசாத் மற்றும் ஆதரவாளர்களை வைத்து வீட்டின் மீது கற்களை வீசியும் வீட்டின் சுற்றுச்சூழல் எடுத்து வீட்டில் கேட்டை அடித்து நொறுக்கி உள்ளனர்.
மேலும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியும் உள்ளிட்ட பொருட்களையும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர் இந்த நிலையில் இது தொடர்பாக மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டின் மீது கற்களை வீசியும் அடியாட்களை வைத்து தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது மேலும் முகத்தை மூடிக்கொண்டு சிசிடிவியை அடித்து நொறுக்கும் காட்சியும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved