Also Watch
Read this
By: Manigandan Raja

போலீசார் அத்துமீறுவதாக புகார் :
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு மதன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதற்காக சிறப்பு தனிப்படைகளை அமைத்து கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் தூத்துக்குடியில் உள்ள ஒரு டாஸ்மாக் அருகே உள்ள மதுக்கூடத்துக்கு
அதிகாலை நேரத்தில் செல்லும் சாதாரண உடை அணிந்த போலீசார், அந்த மதுபானகூடத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைகின்றனர்.
பின்னர் அந்த மதுபானக்கூடம் முழுவதும் சோதனை செய்கின்றனர். அங்கு மூட்டையில் வைக்கப்பட்டு இருந்த காலி பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்டவற்றை கீழே தள்ளிவிட்டு செல்கின்றனர். அந்த நேரத்தில் மதுக்கூடத்தை சேர்ந்தவர்கள் ஓரமாக நிற்கின்றனர்.
இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மதுக்கூட கதவை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை செய்த வீடியோ வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved