Also Watch
Read this
By: Web Team

நாமக்கல்லில் வீட்டில் உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் இருந்து தந்தை, மகளின் சடலங்களை மீட்ட போலீசார் இருவரும் தவறி விழுந்தார்களா, தற்கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
யோகா நகரில் வசித்து வந்த மயில்கண்ணனின் மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்றதாகவும், மகன் அமெரிக்காவில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. தந்தையும், மகளும் மட்டும் தனியாக இருந்த நிலையில், நீரிழிவு நோய் பாதிப்புள்ள மகளுக்கு 34 வயதாகியும் திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற மன வருத்தத்தில் மயில்கண்ணன் இருந்ததாக கூறப்படுகிறது.