வேளாண்மை துறையில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளித்தாலும் வேளாண் பொருட்களுக்கான ஆதரவு விலை மற்றும் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் எதிர்பார்ப்பதாக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளித்தாலும்... தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வேளாண்மை துறை என தனியாக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வேளாண்மை நிதிநிலை அறிக்கை வாசித்தார். அதில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேளாண் துறைக்கு அறிவித்த அறிவிப்புகளை செய்த திட்டங்களை மட்டும் அறிவித்து பட்ஜெட் முடிக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்த்தோம்....எந்த ஒரு புதிய அறிவிப்பும் இல்லாத அறிவிப்பாக இருந்தது. இந்நிலையில் வேளாண் துறைக்கு தேர்தல் வரும் நேரத்தில் கூட்டுறவு கடன் தள்ளுபடி வேளாண் உற்பத்தி பொருளுக்கான ஆதரவு விலை உயர்வு ஆகியவை விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்ததாகவும் ஆனால் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாத போதும் தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக தெரிவித்தனர். பல்வேறு அறிவிப்புகளை வரவேற்கிறோம்அதனை முறையாக மேற்கொள்ள வேண்டும் ஜூன் 12 தண்ணீர் திறப்பதற்குள்ளாக அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும், பால் கொள்முதல் விலை மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது, வேளாண் பண்ணைகள் உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்பதாகவும் தெரிவித்தனர். Related Link நகைக்கடன் தள்ளுபடி - தமிழகத்திற்கே வந்தது தங்கமான அறிவிப்பு