Also Watch
Read this
By: Fyrose Banu

காங்கிரஸ் கட்சியில் ஜாதி பாகுபாடு இருந்ததால் தான் பெரியார் அதிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை துவங்கினார் என ஆவடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலாநிதி வீராசாமி எம்.பி பேசினார்.

தவெக தலைவர் விஜய் அஞ்சுகிறார்
உயிருடன் திரும்பி வருவோமா என உத்திரவாதம் இல்லாமல் மிசாவில் சிறை சென்றார் மு.க.ஸ்டாலின், ஆனால் சிலருக்கு போலீஸ் விசாரணை என்றால் கை,கால் எல்லாம் நடுங்குகிறது வரமாட்டேன்,வரமாட்டேன் என அஞ்சுகின்றனர் என தவெக தலைவர் விஜய்யை விமர்சனம் செய்தார்.

அதிமுக கூட்டணி குறித்து விமர்சனம்
ஜெயலலிதா இருந்தால் தமிழகத்தை தலைகுனிய விட்டு இருக்கமாட்டார், இப்போது இருப்பவர் கைகட்டி, வாய்மூடி, முட்டி போட்டு கூட்டணியில் இருக்கிறார் என அதிமுக கூட்டணி குறித்து கலாநிதி வீராசாமி எம்.பி கடுமையாக விமர்சித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved