Also Watch
Read this
Posted on: Mar 19, 2026 01:48 PM
By: Manigandan Raja

வாழ்க்கை வளமாகட்டும் :
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு போதை பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சமூக ஆர்வலர் நிர்மலா "போதை வேண்டாம் வாழ்க்கை வளமாகட்டும்"என்ற கருத்தை மையமாக கொண்டு பொம்மலாட்டம் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஷைனி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் போதை பொருட்கள் மனித வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்தி நல்ல பாதையில் சென்று கல்வியை கற்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு எளிமையாக புரியும் வகையில் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் பொம்மலாட்டத்தை ரசித்ததுடன் போதை பழக்கத்திலிருந்து விலகி நல்ல வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உறுதியும் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved