Also Watch
Read this
By: Web Team

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் நடக்காததால் விவசாயிகள் பாதிப்பு அடைவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் ரிப்போர்ட் பார்த்து மட்டுமே பயிர்க்கடன் கொடுக்க வேண்டும் என தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.