Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்ய தாமதம் ஆவதாகக் கூறி விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கரைபுதூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒரே பட்டியல் எழுத்தரை மட்டும் நியமித்துள்ளதால் ஒரு வாரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை உள்ளதாகவும், மழை பாதிப்புக்கு முன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், கூடுதல் கூலி ஆட்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.