Also Watch
Read this
By: Web Team

புதுக்கோட்டை மாவட்டத்தில் எலுமிச்சை பழம் கொள்முதல் விலை கிலோவுக்கு 20 ரூபாயாக குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆலங்குடி அருகே கீரமங்கலம், மாங்காடு, வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கிலோ 100 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்த எலுமிச்சை தற்போது 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
வெளி மாநிலங்களில் இருந்து எலுமிச்சை கொள்முதல் செய்யப்படுவதை தடுத்து, உள்ளூர் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved