Also Watch
Read this
By: Web Team

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த மணமேல்குடியில், அமெரிக்காவின் 50% வரி விதிப்புக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி மீனவர் சங்கம்
சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணமேல்குடி பேருந்து நிலையம் அருகே, சிபிஐ ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய கடல் உணவுகள் மீது 50 சதவீதம் வரி விதிப்பு செய்து இந்திய மக்களை மிரட்டும் தொணியில் செயல்படுவதை கண்டித்தும், அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை இந்தியாவில் தடை செய்ய வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது. இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு, சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, கண்டன கோஷங்கள்
எழுப்பப்பட்டன.