Also Watch
Read this
By: Web Team

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள காரையார், சேர்வலாறு உள்ளிட்ட பிரதான அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது பரவலாக கன மழை பெய்து வருகிறது.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, சேர்வலாறு அணையில் இருந்து விநாடிக்கு 1,800 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இதனால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால்,
ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏற்பாடு... தேரை சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved