Also Watch
Read this
By: Web Team

கரூர் மாவட்டம் மேலப்பாளையம் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திரளான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்தனர்.
எல்லை அரசு கருப்பண்ணசாமி, முச்சிலியம்மன், கன்னி விநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேக விழா, வரும் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி, திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து மேளதாளங்கள் தாரைதப்பட்டைகள் முழங்க, தேவராட்டம், ஒயிலாட்டம் சகிதம் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலத்தில் கருப்பண்ணசாமி மற்றும் அம்மன் வேடமிட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். மேலும், நடனமாடும் குதிரைகள், பட்டத்து யானை, ஒட்டகங்கள், ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved