Also Watch
Read this
By: Manigandan Raja

பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் :
காரைக்கால் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு நேரு வீதியில் உள்ள ரெஸ்டோ பார் ஒன்றில் விடுதி அறைகளில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக நகர காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரெஸ்டோ பாருக்கு சென்ற போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது பாரை ஒட்டி உள்ள விடுதி அறைகளில் மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனை அடுத்து அனுமதி இன்றி விடுதி அறைகளில் பதுக்கி வைத்திருந்த மதுபான பாட்டில்களை கைப்பற்றிய போலீசார் கலால் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கலால்துறையினர் சார்பு ஆட்சியர் பூஜா உத்தரவின் பேரில் ரெஸ்டோ பார் மற்றும் விடுதிக்கு சீல் வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved