Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி தெப்பதிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆடிக்கிருத்திகையின் முதல் நாளையோட்டி, காவடி மண்டபத்தில் இருந்து வள்ளி தெய்வானை மற்றும் முருகப்பெருமான் உற்சவர் தேர் வீதி வழியாக மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை குளத்திற்கு ஊர்வலமாக சென்றடைந்தார்.
இதனை தொடர்ந்து, அலங்கரிக்கபட்ட தெப்பதில் எழுந்தருளிய முருகபெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.