Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
கோணம்பட்டி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. திருச்சி துவரங்குறிச்சியிலிருந்து கழிவுநீர் கொண்டு வந்து சுத்திகரிப்பட உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கும் என குற்றம்சாட்டினர்.
கிராம மக்களுக்கு ஆதரவாக அதிமுகவினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் : நேரடி கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய தாமதம் ஆவதாக குற்றச்சாட்டு