Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் விபத்தால் மூளைக் சாவு அடைந்த 22 வயது இளைஞரின் இதயத்தை அவரது குடும்பத்தார் தானமாக கொடுக்க முன்வந்ததையடுத்து.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் திருச்சி வழியாக தஞ்சைக்கு வந்த வாகனத்தை தஞ்சை மாவட்ட எல்லையான புதுக்குடியில் இருந்து தஞ்சை போக்குவரத்து ஆய்வாளர் தனது ஜீப்பில் சைரன் ஒலியுடன் பைலட்டாக முன்வர தஞ்சை கணபதி நகரில் இயங்கி வரும் அபெக்ஸ் இதய மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்ட இதயம் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து தஞ்சை அபெக்ஸ் இதய மருத்துவமனை மருத்துவர்கள் இங்கு இதயம் பாதிக்கப்பட்ட 52 வயது பால்ராஜ் எனும் நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved