Also Watch
Read this
By: Web Team

சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே பழுதாகி சாலையோரம் நின்றிருந்த டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதி பள்ளத்தில் சாய்ந்த விபத்தில் அனைவரும் காயமின்றி தப்பினர்.
தாம்பரத்தில் இருந்து ஆவடி நோக்கி சென்ற அரசுப் பேருந்து, மலையம்பாக்கம் அருகே சர்வீஸ் சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக தண்ணீர் டிராக்டர் மீது மோதி சாய்ந்தது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் பேருந்தை ராட்சத கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.