Also Watch
Read this
By: Manigandan Raja

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றன இந்த படகுகள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தன அப்போது இலங்கை கடற்படையின் ரோந்து படகுகள் மூலம் எல்லை தாண்டியதாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை துரத்தி துரத்தி விரட்டி அடித்தனர்.

விசைப்படகுகளும் இலங்கை கடற்படை பிடியிலிருந்து தப்புவதற்காக மின்னல் வேகத்தில் படகுகளை செலுத்தினர். இலங்கை கடற்படையின் பிடியிலிருந்து தப்புவதற்காக ராமேஸ்வரம் படகுகள் மின்னல் வேகத்தில் செல்லும் காட்சியும் அந்த படகுகளை இலங்கை கடற்படையின் ரோந்து படகு துரத்தும் காட்சியும் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.