Also Watch
Read this
By: Web Team

தென்காசி அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி நையாண்டி மேள தொழிலாளி உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வள்ளிநகரை சேர்ந்த நையாண்டி மேளம் வாசிக்கும் முருகேசன், கடையம் மயிலப்பபுரம் பகுதியில் இயற்கை உபாதை கழித்துவிட்டு, அருகிலுள்ள கல்குவாரியில் கால் கழுவுவதற்காக இறங்கியுள்ளார்.
அப்போது, கால் வழுக்கி உள்ளே விழுந்த அவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சூழலில், பாதுகாப்பில்லாத நிலையில் செயல்படும் கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்தும், முருகேசனின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரியும், உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் :சென்னை புறநகர் பகுதிகளில் போலீஸார் அதிரடி சோதனை..!