Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் ஏகாட்டூர் அருகே டீசல் டேங்கர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான இடத்தில் 26 மணி நேரத்திற்கு மேலாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை மணலியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திலிருந்து நேற்று லட்சக்கணக்கான லிட்டர் டீசலை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட டேங்கர் ரயில் திருவள்ளூரில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதனால் நான்கு இருப்புபாதைகள் பலத்த சேதமடைந்தன.
சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு இருப்பு பாதைகள் சீரமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved