Also Watch
Read this
By: Web Team

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே தடையை மீறி கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
கோனூர் பகுதியை சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமிக்கு சொந்தமான நிலத்தில் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன.
அவரது தென்னை மரங்களில் இருந்து இறங்கப்பட்ட கள் ஒரு லிட்டர் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதையடுத்து, அதனை வாங்க மதுப்பிரியர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved