Also Watch
Read this
By: Web Team

மதுரையில், காதலிக்கும் போது ஒன்றாக எடுத்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கல்லூரி மாணவியை மிரட்டிய இளைஞரை கடத்திய கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவிலை சேர்ந்த கோகுல் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்த போது மாணவி ஒருவரை காதலித்து, பிறகு விலகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோகுல் தன்னை மிரட்டுவதாக அம்மாணவி சக மாணவர்களிடம் உதவி கேட்டதையடுத்து, அவர்கள் கோகுலை மதுரைக்கு வரவழைத்து செல்போனில் உள்ள போட்டோக்களை அழிக்குமாறு எச்சரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு கார்த்திக், முகேஷ் ஆகியோர் கோகுலை காரில் கடத்திய நிலையில், ரோந்து பணியில் இருந்த போலீசார் பின்தொடர்ந்து சென்று பிடித்தனர்.