Also Watch
Read this
By: Manigandan Raja

தாம்பரம் அருகே மதுபோதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தியதால் பரபரப்பு நிலவியது. சேலையூர் காவல் நிலையம் அருகே உள்ள மதுபானக் கடையில் மது அருந்திய இருவர், சாலையில் வந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதை தடுக்கச் சென்ற நபரை இருவரும் சேர்ந்து தாக்கிய நிலையில், அவர் மயங்கி விழுந்ததைக் கண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால், இருவரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.