Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கிராமத்திற்குள் நுழைந்த யானையை வனத்துறையினர் விரட்ட முற்பட்டபோது ஆக்ரோஷமடைந்து அவர்களை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போஸ்பரா செம்பக் கொல்லி பகுதியில் சுற்றித்திரிந்த யானையை, வனத்துறையினர் விரட்ட முயன்றனர். அப்போது வனத்துறையினரின் வாகனத்தை யானை துரத்தி ஓடியதால், வாகனத்தை பின்பக்கமாக இயக்கி தப்பித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved