Also Watch
Read this
By: Web Team

அதிகாலையில் வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறியதால் வீட்டில் உள்ளவர்கள் அச்சமடைந்தனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின். இவரது கணவர் செய்யது கரீம் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். எனவே தனது இரண்டு குழந்தைகளுடன் ஜாஸ்மின் அன்புநகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென வீட்டில் இருந்த பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதை எடுத்து உடனடியாக ஜாஸ்மின் தனது இரண்டு குழந்தைகளையும் வெளியே அழைத்துக்கொண்டு வேகமாக ஓடியுள்ளார்.
அந்த நேரத்தில்பற்றி எரிந்த பிரிட்ஜ் அதிக சத்தத்துடன் வெடித்துள்ளது. மூன்று பேரும் அலறியடித்து வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதை அடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத் துறையினருக்கு
தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.