Also Watch
Read this
Posted on: Jan 08, 2026 11:26 AM
By: Manigandan Raja
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளைகளை, காளையர்கள் போட்டி போட்டு அடக்கினர். மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டில் நடைபெறும் முதல் போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். 400 காளைகளும், 750 மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதையும் பாருங்கள் - தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved