Also Watch
Read this
By: Manigandan Raja

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பொகலூர் வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்து இரண்டு நபர்கள் சுற்றித் திரிந்து வருவதாக மேல்பட்டி போலீசருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேல்பட்டி போலீசார், நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த அஜித்குமார் புகழேந்தி என்பது தெரிய வந்தது. இவர்கள் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் அவர்களிடமிருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 26 நாட்டு துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்து, மேல்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.