Also Watch
Read this
By: Manigandan Raja

செங்கல்பட்டு பழைய தாலுகா காவல் நிலையத்தின் வெளிப்பகுதி, அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள தூசு படிந்த இருசக்கர வாகனங்கள், விபத்தில் சிக்கிய சிதைந்த கார்கள் மற்றும் துருப்பிடித்த ஆட்டோக்கள் நிலையில் உள்ளது.
செங்கல்பட்டு பழைய தாலுகா காவல் நிலைய வளாகம் தற்போது ஒரு வாகனக் காப்பகம் போலக் காட்சியளிக்கிறது. இங்கு கடந்த சில மாதங்களாக மட்டுமல்ல, பல ஆண்டுகளாகப் பல்வேறு வழக்குகளில் சிக்கிய நூற்றுக்கணக்கான வாகனங்கள் தேங்கிக் கிடக்கின்றன.
மழையிலும் வெயிலிலும் நனைந்து இந்த வாகனங்கள் தற்போது உருக்குலைந்து, பயன்பாட்டிற்கு லாயக்கற்ற இரும்புச் சட்டங்களாக மாறி வருகின்றன. செடிகொடிகள் மண்டியுள்ள வாகனங்கள்,
வாகனங்களுக்கு இடையே தேங்கியிருக்கும் மழைநீர்
தேங்கிக் கிடக்கும் வாகனங்களால் பல சிக்கல்கள் எழுந்துள்ளன: சுகாதாரச் சீர்கேடு: நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் வாகனங்களுக்கு இடையே செடிகொடிகள்
வளர்ந்து, புதர்போலக் காட்சியளிக்கிறது.
மழைக்காலங்களில் இதில் நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இடநெருக்கடி,மதிப்பு இழப்பு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த வாகனங்கள் முறையான பராமரிப்பின்றி துருப்பிடித்து வீணாவதால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
பொதுமக்களின் வழக்குகள், மணல் கடத்தல் அல்லது திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். உரிமையாளர்கள் முன்வராத பட்சத்தில் அல்லது சட்ட நடைமுறைகள் முடிந்த வாகனங்களை உடனடியாகப் பொது ஏலத்தில் விட வேண்டும்" என வலியுறுத்துகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved