Also Watch
Read this
By: Web Team

ஆந்திர மாநிலம், கலவகுண்டா அணையில் இருந்து சீக்கிர ராஜபுரம் பொன்னையாற்றில் கடல் போல் பெருக்கெடுத்து, தண்ணீர் ஓடி வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக, பொன்னையாற்றில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதுமாக பெய்த மழையின் காரணமாக ஏரி, குளங்களில், உபரி நீர் மற்றும் மழை நீர், கால்வாய்களின் வழியாக ஆறுகளில் கலக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிக அளவில் தற்போது ஆற்றில், வெள்ள நீரானது பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக, சீக்கிராஜபுரம் பகுதியில் உள்ள பொன்னை ஆற்றில் இரு கரைகளை தொட்டவாறு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொது மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும், ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved