Also Watch
Read this
By: Manigandan Raja

சட்டவிரோதமாக செயல்பட்ட 242 ஆன்லைன் சூதாட்ட தளங்களை மத்திய அரசு முடக்கியது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா-2025-க்கு குடியரசுத்தலைவ திரவுபதி முர்மு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தார்.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, சட்டவிரோத ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு மேலும் தீவிரப்படுத்தியது. இந்நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்ட 242 சூதாட்ட இணையதள பக்கங்களை மத்திய அரசு முடக்கியது.
இதையும் படியுங்கள் : பணி நேரம் முடிந்ததால் விமானம் இயக்க மறுப்பு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved