Also Watch
Read this
By: Web Team

கடலில் மூழ்கிய படகு :
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கடலில் மூழ்கிய படகில் இருந்த 7 மீனவர்கள், கடலோர காவல் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். நீண்டகரை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்ற மீன்பிடி படகு ஆழ்கடல் பகுதியில் பழுதானது.
இந்த நிலையில், படகிற்குள் கடல்நீர் உட்புகுந்ததால், மெல்லமெல்ல படகு தண்ணீரில் மூழ்கியது. இதையடுத்து, அந்த படகில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 3 மீனவர்கள் உள்பட 7 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பழுதான படகின் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கியதால் அதனை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved