Also Watch
Read this
By: Manigandan Raja

பழமையான வழக்கில் கைது :
பீகார் மாநிலம் பாட்னாவில் சுயேட்சை எம்.பி. பப்பு யாதவ் நள்ளிரவு கைது செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது. 2024 மக்களவைத் தேர்தலில் பூர்ணியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவரும்.
ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவை, 1995 ஆம் ஆண்டு நடந்த குற்ற சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகததால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ஆதரவாளர்கள் கைது :
பப்பு யாதவைக் கைது செய்யவதற்கு போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றபோது அங்கு திரண்ட அவரது ஆதரவாளர்கள் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் நிலவியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved