Also Watch
Read this
By: Web Team

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
மும்பையின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வரும் இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக, நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால், அத்தியாவசிய தேவைகள் தவிர,வேறு எதற்கும் பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நிர்வாக ஆலோசனைகளுக்கு ஒத்துழைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய தகவலின்படி, சான்டாக்ரூஸ் பகுதியில் 99 மிமீக்கு அதிகமாகவும், கோலாபா கடலோரப் பகுதிகளில் 38 மிமீ மழையும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved