Also Watch
Read this
By: Web Team

லடாக்கில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தின் எதிரொலியாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சூக்கின் தொண்டு நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சமூக ஆர்வலர் சோனம் வாங்சூக், லடாக்கில் மாணவர் கல்வி மற்றும் கலாச்சார இயக்கம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்படுகிறது.
இந்நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து இவர் முன்னெடுத்த உண்ணாவிரத போராட்டம் வன்முறையில் வெடித்தது. இதன் காரணமாக, வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்தின்படி, வாங்சூக் நிறுவனத்துக்கான பதிவை உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.