Also Watch
Read this
By: Web Team

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு வீரர்கள் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையத்திற்கு திட்டமிட்டப்படி பயணித்தனர்.
7 முறை ஏற்பட்ட தடங்கல்களை கடந்து, அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நண்பகல் 12:01 மணிக்கு விண்ணில் ((பாய்கிறது )) பாய்ந்தது ஆக்சியம் 4 திட்டத்தின் Falcon 9 ராக்கெட்.
இது 28 மணிநேர பயணத்திற்கு பிறகு 26 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அடையும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் 1984 ஆம் ஆண்டு விண்ணுக்கு சென்று வெற்றிகரமாக திரும்பிய ராகேஷ் ஷர்மாவுக்கு பிறகு, விண்வெளியில் பயணிக்க உள்ள இரண்டாவது இந்தியர் என்ற சிறப்பை பெறப்போகிறார் சுபான்ஷு சுக்லா..
இதையும் படியுங்கள் : வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணியில் மாநாடு 2 திரைப்படம்?