Also Watch
Read this
By: Manigandan Raja

பாஜக ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலும் வங்கமொழி பேசும் மக்கள் மீதான கொடூரமான அடக்குமுறை நடப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். முர்ஷிதாபாத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒடிசாவிலிருந்து பயந்து வீடு திரும்பிய சம்பவம் தமது இதயத்தை நொறுங்கச் செய்ததாக குறிப்பிட்டுள்ள மம்தா, ஒடுக்கப்பட்ட மற்றும் புலம்பெயர்ந்த வங்கமொழி பேசும் குடும்பங்களுக்கு தாங்கள் துணை நிற்பதாக உறுதியளித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழியில் பேசுவது குற்றமாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved