Also Watch
Read this
By: Web Team

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உடல் நலக்குறைவால் கவலைக்கிடமான நிலையில் இருந்த மூதாட்டியை சாலையோரம் படுக்க வைத்துவிட்டு தப்பியோடிய குடும்பத்தினரை போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியை மீட்டு அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.