Also Watch
Read this
By: Web Team

இயற்கை பேரிடரால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள உத்தரகாண்டிற்கு 1,200 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக தலைநகர் டேராடூனுக்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.
அப்போது வெள்ளம் மற்றும் பேரிடரால் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பலியானவர்களின் குடும்பத்துக்கு 2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை இருநாட்டு அமைச்சர்களும் முரணாகப் பேசியதால் குழப்பம்