news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரண தங்கத்தின் விலையில் ஆறுதல்
tv

Also Watch

tv

Read this

ஆபரண தங்கத்தின் விலையில் ஆறுதல்

ஒரே நாளில் 2 முறை விலை குறைவு

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்துள்ளது. இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.600 குறைந்த நிலையில் தற்போது மேலும் ரூ.350 குறைந்து ரூ.15,850க்கு விற்பனை ஆனது. இன்று காலை ஒரு சவரனுக்கு ரூ.4,800 குறைந்த நிலையில், தற்போது மேலும் ரூ.2,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,26,800க்கு விற்பனை ஆனது

உச்சத்தில் தங்கம் விலை...
அண்மை நாட்களாக அதிரடியாக அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை சற்று சரிந்து, ஆறுதலை தந்துள்ளது. சென்னையில், ஒரு சவரனுக்கு 4,800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 29,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 600 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 16,200 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையும், ஒரு கிராமுக்கு 10 ரூபாய் என்ற அளவில் சற்று குறைந்து 415 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு 10,000 ரூபாய் குறைந்து, நான்கு லட்சத்து 15,000 ரூபாயாக உள்ளது.

நேற்று உச்சத்தில்... இன்று ஆறுதல்...
இந்திய வரலாறு கண்டிராத வகையில், நேற்று கடுமையான உச்சத்திற்குச் சென்றது ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரனுக்கு 9,520 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 34,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலையும், ஒரு கிலோவுக்கு 25,000 ரூபாய் அதிகரித்து 4 லட்சத்து 25,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில், நேற்று காலை 29ஆம் தேதி, ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய உயர்வைச் சந்தித்தது. ஒரே நாளில், ஒரு சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து, பொது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று ரூ.9,520 உயர்வு

சென்னையில், நேற்று காலை, ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,34,400க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.16,800 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு மொத்தமாக ரூ.14,720 உயர்ந்துள்ளது.

உச்சம் தொட்ட வெள்ளி
வெள்ளியின் விலையும் ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.425 ஆகவும், பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.25,000 உயர்ந்து, ரூ.4 லட்சத்து 25 ஆயிரமாகவும் விற்பனை ஆனது.

இன்று பிற்பகலிலும் சற்று குறைவு
இந்தநிலையில், சென்னையில், ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 2ஆவது முறையாக குறைந்தது. மொத்தமாக, இன்று ஒரு சவரனுக்கு ரூ.7,600 குறைந்துள்ளது. இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.600 குறைந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.350 குறைந்து ரூ.15,850க்கு விற்பனை ஆனது. இன்று காலை ஒரு சவரனுக்கு ரூ.4,800 குறைந்த நிலையில், தற்போது மேலும் ரூ.2,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,26,800க்கு விற்பனை ஆனது.

குண்டுமணி வாங்க முடியுமா?
ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வால், திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிக்காக தங்கம் வாங்க எண்ணியிருந்த பொது மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சர்​வ​தேச பொருளா​தார சூழ்நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு வீழ்ச்சி ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்​ண​யம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் டிசம்பர் 15ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்து 120க்கு விற்பனை ஆனது. அதன்பின்னர், ஆபரணத் தங்கம் விலை படிப்படியாக உயர்வை கண்டது.

என்ன தான் காரணம்?
ஈரானில் உள்நாட்டு கலவரம், அந்நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்ற போர் அச்சம், சர்வதேச பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால், முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. தங்கத்தின் விநியோகம் குறைந்து தேவை அதிகரித்துள்ளது. எவ்வளவு தான் காரணங்களை அடுக்கினாலும், சொக்கத் தங்கம் மீது சொக்கிக் கிடக்கும் சாமானியர்கள் ஏங்கிப்போய்த் தான் கிடக்கின்றனர்.

Related Link
விசாரணை வளையத்தில் நடிகர் ஜெயராம்

விசாரணை வளையத்தில் நடிகர் ஜெயராம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் கூட்டம் - விஜய் உரை

12
16 mins agoshare
தவெக தலைவர் விஜய் உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved