முதலீடுகளை செய்யும் IBM நிறுவனம் : அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான IBM, இந்தியா முழுவதும் கணிணி துறையில் அதிக முதலீடுகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் மருத்துவம், செயற்கை நுண்ணறிவு துறையில் உருவாகும் பிரச்னைகளை கணினி மூலம் தீர்க்க உதவும் Quantum computing மற்றும் cloud infrastructure ஆகியவற்றில் முதலீடு செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டின் இளம் தலைமுறையினருக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் அவர் கூறியுள்ளார். Related Link வாட்ஸ் அப்பில் நீண்ட நாள் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்