Also Watch
Read this
பாரதிராஜாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என்று இசை அமைப்பாளர் இளையராஜா உருக்கத்துடன் கூறினார்.

இயக்குநர் இமயம் மறைவு
திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையான இயக்குநர் இமயம் பாரதிராஜா , வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று ஜூன் 10ஆம் தேதி, அதிகாலை காலமானார்.

அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனையடுத்து, தனது வாழ்நாள் நண்பரும், கலைப்பயணத்தில் மிக நெருக்கமானவருமான பாரதிராஜா உடலுக்கு, இசைஞானி இளையராஜா நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

பேச ஒன்றும் இல்லை...
அப்போது, இளையராஜா கூறியதாவது;
பேச ஒன்றும் இல்லை. பாரதிராஜாவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். உங்களோடு இருக்கும் உறவு தான் அவருடனும் இருக்கிறது. இரண்டும் வேறு வேறு இல்லை. நாட்டையும், நாட்டு மக்களையும், கலைஞர்களையும் நேசிப்பதுதான் என்னுடைய பிறப்பு. அதைத் தவிர ஒன்றும் இல்லை.
இவ்வாறு இளையராஜா கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved